இளைய தளபதி விஜய் தன்னுடைய பிறந்த நாளை மிக அமைதியான முறையில் கொண்டாடி உள்ளார்.வழக்கமாக ஒவ்வொரு பிறந்த நாளன்றும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம், ஏழைகளுக்கு இலவச பொருட்கள், அன்னதானம் வழங்கி விமர்சையாக பிறந்த நாளை கொண்டாடுவார் விஜய்.
ஆனால் இந்த முறை மிக அமைதியான முறையில் கொண்டாடியுள்ளார். இன்று காலையிலேயே தன் பெற்றோரைச் சந்தித்து ஆசி பெற்ற விஜய், பின்னர் ஜில்லா படப்பிடிப்புக்கு சென்று பிறந்தநாளை கொண்டாடினாராம்.
அவருக்காக படக்குழுவினர் கேக் வரவழைத்திருந்தனர். கேக் வெட்டிய பிறகு, அனைவருக்கும் தன் கையாலேயே பிரியாணியை பரிமாறினாராம்.
இதற்கு அரசியல் நெருக்கடிகள் தான் காரணம் என பரபரப்பாக பேசப்படுகிறது.