தாமரைப்பூ பறிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உ யிரிழப்பு!!

470

தாமரைப்பூ பறிக்க..

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை ஜெயந்தி ஆயா குளத்தில் தாமரைப்பூ பறிக்க சென்ற ஒருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற நிலையில் மற்றுமொருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருப்பெருந்துறை 5ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராசா சத்தியா என்பவரே இவ்வாறு குளத்தில் மூழ்கி உ யிரிழந்துள்ளார்.

இதேவேளை,சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்
கா ணாமல்போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.