தேர்தலின் பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரங்களில் மாற்றம்!!

722

பாடசாலைகள்..

பொதுத் தேர்தல் விடுமுறையின் பின்னர் ஆரம்பமாகும் பாடசாலைகளின் நேரம் மற்றும் வகுப்புகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதியின் பின்னர் பின்வருமாறு பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை – 6, 10, 11, 12, 13, செவ்வாய்க்கிழமை – 7, 10, 11, 12, 13, புதன்கிழமை – 8, 10, 11, 12, 13, வியாழக்கிழமை – 9, 10, 11, 12, 13, வெள்ளிக்கிழமை – 9, 10, 11, 12, 13,

6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும் 10, 11, 12, 13 ஆகிய வகுப்புகளுக்கு காலை 7.30 மணி முதல் காலை 3.30 மணி வரை பாடசாலைகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

200 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள ஆரம்பக்கல்வி தரங்களைக் கொண்ட பாடசாலைகளில் திங்கட்கிழமை – 1 மற்றும் 5ஆம் தரத்திற்கும் செவ்வாய்க்கிழமை – 2 மற்றும் 5 ஆம் தரத்திற்கும், புதன்கிழமை – 3 மற்றும் 5 ஆம் தரத்திற்கும்,

வியாழக்கிழமை – 4 மற்றும் 5 ஆம் தரத்திற்கும், வெள்ளிக்கிழமை – 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கும் வழமையான நேரத்தில் பாடசாலைகள் இடம்பெறும் என குறிப்பிடப்படுகின்றது.