வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் மரணம்!!

395

விபத்தில்..

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா, உளுக்குளம் பகுதியில் நேற்றையதினம் (30.07.2020) இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கிப்பயணித்த பேருந்து உளுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வீதியால் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவருடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் நோயாளர்காவு வண்டிமூலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.