வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சிவில் சமூக அரங்கம்!!

452

சிவில் சமூக அரங்கம்..

வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போ லியான செய்திகள் அற்ற தேர்தல் பிரச்சாரம் எனும் தொனிப்பொருளில் சிவில் சமூக அரங்கம் வவுனியா நகரபை மண்டபத்தில் இன்று (31.07.2020) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் எம்.பி.சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெகான் பெரேரா தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் இக் கலந்துரையாடலில் சட்டத்தரணிகள், மதத்தலைவர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் தேர்தலின் போதான பிரச்சாரங்கள், மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும், போலி தேர்தல் வாக்குறுதிகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.