இலங்கையில் வாகனங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!!

499

வாகனங்களுக்கு பாரிய தட்டுப்பாடு?

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் காரணமாகவே வாகனங்களை இறக்குமதி செய்யமுடியாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் தற்சமயம் இறக்குமதி செய்யப்பட வாகனங்கள் அனைத்தும் விற்பனையாகி விட்டதால் புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.