வவுனியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர் உ யிரிழப்பு!!

369

விபத்தில் காயமடைந்த முதியவர்..

வவுனியா – ஓமந்தை பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சைபலனின்றி நேற்றைய தினம் (02.08.2020) உ யிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியிலுருந்து வவுனியா நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த குறித்த முதியவரும், அவரது மகனும், ஓமந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது வீதியின் நடுவே மாடு குறுக்கிட்டதால் விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த மேகவண்ணன் (வயது 62) என்ற முதியவரே ம ரணமடைந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.