வவுனியா வாக்களிப்பு நிலையங்களில் கிருமி நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

508

கிருமி நீக்கும் செயற்பாடு..

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் கிருமி நீக்கும் செயற்பாடுகள் இன்று(04.08.2020) முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் 16 ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாளை காலை நடைபெறவுள்ள நிலையில் வவுனியாவில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள ஒரு இலசத்து 19 ஆயிரத்து 811 வாக்காளர்களும் வாக்களிக்க 141 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிலையங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், வாக்களிப்பு நிலையங்களில் கிருமி நீக்கம் செய்யும் வகையில் மருந்து விசிறப்பட்டது.

தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரப் பிரிவினர் கிருமி நீக்கும் மருந்துகளை தெளித்து வாக்களிப்பு நிலையங்களை சுத்தப்படுத்தினர்.