வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வெற்றிக் கொண்டாட்டம்!!

453

வெற்றிக் கொண்டாட்டம்..

வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளர் குலசிங்கம் திலீபன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி 111,18 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதில் குலசிங்கம் திலீபன் 3203 விருப்பு வாக்குகளைப் பெற்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் முதல் முறையாக புதிய உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதனை முன்னிட்டு அவரின் வீட்டின் முன்பகுதியில் கட்சி ஆதரவாளர்களினால் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.