தாங்கள் அணிந்திருந்த புடவையை வீசி இளைஞர்கள் உயிரை காப்பாற்றிய 3 பெண்கள் : நடந்தது என்ன?

438

புடவையை வீசி..

தமிழகத்தில் தண்ணீரில் மூழ்கிய இளைஞர்களின் உ யிரை தாங்கள் அணிந்திருந்த புடவையைத் தூக்கி வீசி கா ப்பாற்றியிருக்கும் மூன்று பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தின் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, ரஞ்சித், கார்த்திக், பவித்ரன் ஆகிய இளைஞர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அதில் இருவர் ஆற்றுப் பள்ளத்தில் இறங்கிய நிலையில் அதில் சிக்கி கொண்டு உ யிருக்கு போ ராடினார்கள்.

அதனைக் கண்ட நண்பர்களில் இருவர் அவர்களைக் கா ப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளனர். அவர்களும் அதே பள்ளத்தில் சி க்கிக் கொண்டு போ ராடினர். அப்போது, அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி ஆகியோர் இளைஞர்களின் நிலையை கண்டு அ திர்ச்சியடைந்தனர்.

பின்னர் ஒரு நொடி கூட யோசிக்காமல் ஆற்றில் இறங்கி தாங்கள் உடுத்தியிருந்த புடவையை அவர்களது உ யிரைக் கா ப்பாற்றத் தூக்கி வீசி ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு அந்த இளைஞர்களைக் கா ப்பாற்றப் போ ராடினர்.

இறுதியில் இரண்டு இளைஞர்களை உ யிருடன் மீட்டனர். பவித்ரன், ரஞ்சித் ஆகிய இருவர் உ யிரிழந்தனர். இது குறித்து முத்தம்மாள் கூறுகையில், ஆழமான பகுதிக்கு செல்லாதீர்கள் என நாங்கள் எ ச்சரித்தும் அவர்கள் உள்ளே இறங்கினார்கள்.

அவர்களின் அ லறல் ச த்தம் கேட்டு முதல் செய்வதறியாது திகைத்தோம், பின்னர் மூவரும் அணிந்திருந்த சேலைகளை வீசினோம். அதனைப் பிடித்துக் கொண்டு இருவர் கரையேறி வந்தார்கள்.

இருவரை கா ப்பாற்ற முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளதோடு, எங்கள் கண் எதிரில் அவர்கள் இ றந்தது வேதனை தருகிறது என கூறியுள்ளனர்.