வவுனியா சேமமடுவில் யானைகள் அ ட்டகாசம் : இரண்டு வீ டுகள் சே தம்!!

326

சேமமடுவில்..

வவுனியா சேமமடு பகுதியில் நேற்று அதிகாலை ஊருக்குள் புகுந்த யானைகள் இரண்டு வீடுகளை சே தப்படுத்தி சென்றுள்ளதுடன், வீட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்லினையும் உண்டுவிட்டு சென்றுள்ளது.

சேமமடு கிராமத்தில் தொடர்சியாக யானைகளின் அ ட்டகாசம் அதிகரித்து வருவதுடன் இதனால் பயிர்ச்செய்கை உட்பட ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் க வலை தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக தொடர்ந்து வருகின்ற இப்பி ரச்சனையை நிவர்த்தி செய்து யானைகளின் அ ட்டகாசத்தை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை சேமமடுப்பகுதியில் யானையினால் கடந்த வருடங்களில் ஒருவர் ம ரணமடைந்திருந்ததுடன், ஒருவர் கா யமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.