ஜெயில் சாப்பாடு பிடித்துப்போனதால் வேண்டுமென்றே குற்றங்களை செய்யும் நபர்!!

296

Jailசீனாவை சேர்ந்த நபர் ஒருவரை சிறையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, குற்றங்களை செய்து வருகிறார். என்னதான் குற்றங்கள் செய்தாலும், பெரும்பாலானவர்கள் சிறைக்கு செல்ல விரும்புவதில்லை.

ஆனால் சீனாவை சேர்ந்த வாங் என்பவர், மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே குற்றங்களை செய்து சிறையில் பொழுதை கழிக்கிறார். சிறையில் வழங்கும் சாப்பாடு மற்றும் பாதுகாப்பான தங்கும் இடத்துக்காக இவ்வாறு செய்கிறாராம்.

திருட்டு, பொது இடங்களில் சண்டையிடுதல் போன்ற குற்றங்களுக்காக 7 முறை கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டு வழக்கில் ஒருமுறை 14 வருடங்கள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார், ஆனால் சிறை வாசம் முடிந்தபிறகு வெளியில் இருக்க பிடிக்கவில்லை.

இதனால் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பெய்ஜிங்கின் பெங்காட்டி பகுதியில் பேருந்தில் சென்றபோது டிரைவர் இருக்கைக்கு வேண்டுமென்றே தீ வைத்துள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாங்கிற்கு, சமீபத்தில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதுபற்றி வாங் அளித்த பேட்டியில், எனக்கு வீடு ஏதும் கிடையாது. சிறையில் இருந்து வெளிவந்தவுடன் என்னசெய்வதென்றே எனக்கு தெரியவில்லை.

சிறையில் நல்ல உணவும் இருக்க பாதுகாப்பான இடமும் கிடைப்பதால் நான் மீண்டும் சிறைக்கு திரும்பி வர முடிவு செய்து வேண்டுமென்றே குற்றங்களை செய்வதாக தெரிவித்துள்ளார்.