கொரோனா..

அண்மையில் ராஜாங்கன யாய 5 நவோத்யா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவன் கொரோனா தொற்றுக்குளளாகிய நிலையில் வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டார்.

குறித்த மாணவன் இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் குணமடைந்த பின்னர் இரண்டாவது தடவையாக கொரோனா தொற்றியுள்ளதாக வைத்திய பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.

இதனால் இந்த நோயாளியிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு கொரோனா தொற்றாதென்பதே வைத்தியர்களின் கருத்தாகும். இதனால் 14 நாட்கள் வீட்டில் சுய தனிமைப்படுமாறு கூறி அவரை வைத்தியசாலையில் இருந்து வீட்டிற்கு அனுப்பியதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த மாணவனால் தனிமைப்படுத்தப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த பாடசாலை இன்றைய தினம் மீளவும் திறக்குமாறு கல்வி அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.





