இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை மீண்டும் உயர்வு!!

663

கொரோனா..

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 2990ஆக உயர்ந்துள்ளது. இன்று இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஓமானில் இருந்து வந்த இருவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 5 பேர் என 7 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.

இந்நிலையில் 213 பேர் கொரோனா தொற்றுக்காக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இன்று கொரோனா தொற்றில் இருந்து 6 பேர் குணமடைந்தனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2676ஆக அதிகரித்துள்ளது.