இலங்கையின் கொரோனா நிலவரம் : கொரோனா பரவல் தடுப்பு மையம் விடுத்துள்ள அறிவிப்பு!!

563

கொரோனா..

கொரோனா தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாத 68 இலங்கையர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு தேசிய மையம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, கட்டாரில் இருந்து 36 பேரும், சென்னையிலிருந்து 29 பேரும், ஜப்பானில் நரிதாவிலிருந்து மூன்று பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து ​​பி.சி.ஆர் சோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தனிமைப்படுத்தல் மையங்களில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை முடித்த 307 பேர் இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, 30,585 பேர் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்துவிட்டு இன்று தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 46 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இன்னும் 5333 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் நேற்று மொத்தம் 1080 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன. அதன்படி, இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 85,118 என அறிவிக்கப்பட்டுள்ளது.