யாழ்ப்பாணத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம்!!

307

பெருந்தொகை தங்கம்..

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக பெருந்தொகை தங்கத்தை க டத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 6 கோடி 20 லட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடை தங்கத்தை கடத்த முற்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அனலைதீவு கடற்பரப்பில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

மாதகலைச் சேர்ந்த இருவரும் தரகுப் பணத்துக்காக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருவரும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.