மோட்டார் சைக்கிளில் பயணிப்போருக்கு பொலிஸார் எச்சரிக்கை!!

262

பொலிஸார் எச்சரிக்கை..

வீதியில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டநர்கள் போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் பயணிப்போரினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிலர் பொறுப்பற்ற வகையில் தலைகவசம் அணியாமலும், குறிப்பிட்ட வேகத்தை விடவும் வேகமாகவும் பயணிப்பதால் இந்த விபத்துக்கள் ஏற்பட்டுதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விபத்துக்குள்ளான போதும் தெய்வாதீனமாக எவ்வாறு தப்பினார் என்பது தொடர்பான காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் இந்த காணொளி பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.