சுசந்தா சந்திரமாலி..

தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது பேஸ்புக் ப்கத்தில் கருத்து பதிவிட்டு தனது மருத்துவ நிலையை தனது ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தினார்.

ஆரம்ப கட்டத்தில் மருத்துவர்கள் இந்த நோயைக் கண்டறிந்ததைக் குறிப்பிட்டு, பல மாதங்களாக தாம் சிகிச்சை பெற்று வருவதாக சுசந்தா கூறுகிறார்.

இலங்கையின் சிங்களத் திரைப்படங்களிலும், சின்னத் திரைகளிலும் தனது திறமையை வெளிக்காட்டி இலங்கை வாழ் திரைப்பட சினிமாத்துறை ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளவர் பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி என்பது குறிப்பிடத்தக்கது.





