காதலை நிராகரித்த காதலியின் அம்மாவை பழிவாங்க மாணவன் செய்த மோசமான செயல்!!

304

காதலை நிராகரித்த..

தமிழகத்தில் காதலை நிராகரித்த காதலியை பழிவாங்குவதற்காக பெண் தொழில் அதிபரின் படங்களை மார்பிங் செய்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்ட பிளஸ் 2 மாணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னை குமரன் நகரை சேர்ந்தவர் ராணி (41). தொழிலதிபரான இவருக்கு சில நாட்களாக இரவு நேரங்களில் மோசமான அழைப்புகள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி, சமூக வலைத்தளத்தின் மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகளவில் வந்துள்ளது.

இதனால் இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த அப்பெண் தொழிலதிபர் இது குறித்து உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சைபர் க்ரைம் பொலிசார் உதவியுடன் நடத்தப்பட்ட வி சாரணையில், ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் தான் இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

அதன் பின் பொலிசார் சிறுவனை பிடித்து விசாரித்த போது, அந்த மாணவன் தன்னுடன் பள்ளியில் படித்து வந்த குறித்த பெண் தொழிலதிபர் மகளை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளான்.

தனது காதல் குறித்து மாணவன் பெண் தொழிலதிபர் மகளிடம் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால், அந்த மாணவி, என் அம்மாவுக்கு காதலிப்பது எல்லாம் பிடிக்காது என்று கூறி மாணவனின் காதலை நிராகரித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் அம்மாவான தொழிலதிபரை பழிவாங்க முடிவு செய்தார்.

அதன்படி இன்ஸ்டாகிராமில் போலியாக காதலியின் அம்மா பெயரில் 2 கணக்கு தொடங்கி, அதில் காதலியின் அம்மாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாண Video Call அழைப்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் என்று காதலியின் அம்மா செல்போன் எண்ணை பதிவு செய்துள்ளார்.

அதோடு மட்டுமின்றி பல்வேறு மோசமான இணையதளத்தில் பல வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அந்த வீடியோவை காதலியின் அம்மாவிற்கு அனுப்பியதும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து பொலிசார் பள்ளி மாணவன் மீது ஐபிசி 354, 509, ஐடி சட்டம் 66,67 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அ திரடியாக கைது செய்தனர். அதன் பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.