பண மோ சடி
கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோ சடி செய்த கட்டுநாயக்க பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட்ட 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் பலரிடம் இருந்து ஐந்து மில்லியன் ரூபா வரை வசூலித்து மோ சடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவரது விளம்பரத்திற்கு ஏற்ப தொடர்பு கொண்டவர்கள், வங்கி கணக்குகளைத் திறந்து கடவுச்சீட்டு மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல்களை மட்டும் சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டனர்.
இதையடுத்து அந்த பெண் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, வைப்புத்தொகையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துள்ளதாக வி சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.