இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம்!!

373

பிரணாப் முகர்ஜி..

இந்த தகவலை அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மூளையில் ஏற்பட்ட கட்டியின் அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ சென்றபோது அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அவருக்கு மூளையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து வென்டிலேட்டர், எக்மோ கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும்,கோமா நிலைக்கு சென்ற அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த ராணுவ மருத்துவமனை கூறியது. இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பான தகவல் இன்று வெளிவந்துள்ளது.