வவுனியா மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

649

முக்கிய அறிவிப்பு..

கோவிற் – 19 தொற்றுள்ள நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக அனுமதியின்றி எமது நாட்டிற்குள் நபர்கள் உட்பிரவேசித்தலை தடுப்பதற்காக உதவுமாறு பொலிஸாரினால் வவுனியாவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

காய்ச்சல், வரட்டு இருமல், சளி, மூச்சுத் திணறல் இருக்கும் நபர்கள் கொரோனா தொற்றாக இருக்கலாம் எனவே அவர்களிடமிருந்து அவதானமாகவிருங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களை தங்கவைத்தல், பாதுகாப்பளித்தல்,

போக்குவரத்திற்காக உதவியளித்தல் , மறைத்திருந்திருப்பதற்காக உதவி புரிதல் நல்ல செய்யலாகாது எனவே மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக தகவல் கிடைத்தால் அல்லது அறிய கிடைத்தால் இல்லாவிடில் காணக்கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்தல் வேண்டும்.

199 அல்லது 1933 அல்லது 011 2444480 அல்லது 011 2444481 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் அல்லது 071 – 8558875 என்ற வட்சப் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு பொலிஸாரினால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகள் வவுனியா நகர், புதிய பேருந்து நிலையம் போன்ற இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.