வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு : வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பம்!!

639

வேலைவாய்ப்பு..

வறுமைக் கோட்டில் வாழும் ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள செயலணி மூலம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் பொருளாதாரத்தை வலுவடைய செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

கல்வி கற்காதவர்கள் அல்லது சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வி மட்டத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 40 வயதிற்கும் உட்பட்டவர்களுக்கு இவ்வாறு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சமுர்த்தி நிவாரணம் பெற தகுதியான எனினும் கிடைக்காத குடும்பங்களுக்கு இந்த வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிவக்கப்படுகின்றது.

தகுதியானவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு தொழில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 6 மாத பயிற்சி காலத்தினுள் 22500 ரூபாய் சம்பளம் கிடைக்கும் நிலையில் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் 35000 ரூபாய் சம்பளமும் கொடுப்பனவுகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

10 வருடங்கள் தொடர்ந்து பணியாற்றும் மக்களுக்கு அரசாங்கத்தினால் ஓய்வூதியம் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.