வவுனியாவில் இரண்டாவது நாளாக காற்றுடன் கூடிய மழை!!

352

காற்றுடன் கூடிய மழை..

வவுனியாவில் நிலவிய கடும் வெப்ப நிலையான காலநிலையின் பின்னர் இன்று இரண்டாவது நாளாக (01.09.2020) பிற்பகல் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வறட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் மழை பொழிந்தமையினால் விவசாயிகளும் பொதுமக்களும் மனமகிழ்வடைந்துள்ளனர்.

இதேவேளை வவுனியா கணேசபுரம் , சமயபுரம் ஆகிய பகுதியில் நேற்றையதினம் (31.08) மாலை கடும் காற்றுடன் ஆலங்கட்டி மழை காரணமாக 55 குடும்பங்களைச் சோந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.