வவுனியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்கிய கிராம சேவையாளர்!!

604

பாதிக்கப்பட்ட மக்களுக்கு..

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (31.08) மாலை பெய்த கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்தனர்.

மரக்காரம்பளை கிராம சேவையாளர் பிரிவில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை அப்பகுதி கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரன் திரட்டி பிரதேச செயலகம் ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கியிருந்தார்.

இந்நிலையில் கிராம சேவையாளரின் முயற்சியினால் மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்தினால் மக்களின் உடனடி தேவையினை கருத்தில் கொண்டு 42 தரப்பால்கள் கிராம சேவையாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அதனை கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரன் நேற்று (01.09) மாலை கணேசபுரம் பகுதியில் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்.