கோர விபத்தில் மூன்று பேர் பலி : சாரதி கைது!!

329

கோர விபத்தில்..

கொழும்பு – மட்டக்குளி, மெதபார பிரதேசத்தில் சுமை ஊர்தியும் இரண்டு முச்சக்கர வண்டிகளும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் உ யிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி சாரதி ஆகியோரே சம்பவத்தில் உ யிரிழந்துள்ளனர். வீதியில் பயணித்த சுமை ஊர்தி, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மட்டக்குளி கதிரான வத்தை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான டிரோன் ரஞ்சித், ஜா-எல கப்புவத்தை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான அஜித் சில்வா மற்றும் மட்டக்குளி பாம் வீதியை சேர்ந்த 34 வயதான அமிதா சுந்தர்ராஜ் ஆகியோரே சம்பவத்தில் உ யிரிழந்துள்ளனர்.

தக்காளியை ஏற்றிய சுமை ஊர்தி முகத்துவாரத்தில் இருந்து மட்டக்குளி பிரதேசத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, எதிரில் வந்த இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதியுள்ளது.

சுமை ஊர்தியில் ஒரு சக்கரத்தில் காற்று வெளியேறி இருந்ததால், சாரதியால் வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சுமை ஊர்தியின் சாரதியை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.