வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளத்தில் பாதுகாப்பான புகையிரத பாதை அமைக்குமாறு கோரிக்கை!!

602

பாதுகாப்பான புகையிரத பாதை..

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற ரயில்கடவை பாதைக்கு பதிலாக அதனை மூடிவிட்டு புதிதாக பாதுகாப்பான புதிய பாதுகாப்புகடவை அமைக்குமாறு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (02.09.2020) காலை 11 மணியளவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு முன்பாக கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்றினை நடத்துவதற்காக கூடியிருந்தனர்.

அவ்விடத்திற்கு விஐயம் மேற்கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவருமான குலசிங்கம் திலீபன் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதுடன் பாதுகாப்பான முறையில் உடனடியாக புதிய பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

குறித்த இடத்திற்கு ரயில்வே திணைக்கள அதிகாரிகள்,ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா தெற்கு பிரதேசசபை தவிசாளர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் விஐயம் மேற்கொண்டிருந்தனர்.