பரிதாபமாக உ யிரிழந்த 5 மாத கர்ப்பிணிப் பெண்!!

363

திவ்யா..

இந்தியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தை பிடிக்க முயன்று புடவை சிக்கி உ யிரிழந்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பேராவூரில் உள்ள ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையின் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் திவ்யா.

26 வயதான இவர் தினமும் காலை மருத்துவமனைக்கு தயாராகி செல்வது வழக்கம். அதன் படி இன்று காலை 7 மணியளவில் மருத்துவமனைக்கு செல்ல தயாராகியுள்ளார். அதன் படி அவர் செல்லும் பேருந்து வந்த போது, பேருந்தை காட்டி நிறுத்தி ஏறும் போது, எதிர்பாரதவிதமாக அவரின் புடவை மாட்டி பேருந்தின் கீழ் விழுந்து விபத்தில் சிக்கினார்.

இதனால் படுகாயமடைந்த அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் விரைந்து வந்த பார்த்த போது, அவர் 5 மாத கர்ப்பிணி பெண் என்பது தெரியவந்துள்ளது. பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.