இலங்கையில் கொரோனா ஆபத்து நீங்கவில்லை : அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

459


கொரோனா..



இலங்கையில் கொரோனா வைரஸ் ஆபத்து இன்னமும் நீங்கவில்லை என அரச தகவல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரும் இலங்கையர்களில் பெரும்பாலானோர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.



இதன் காரணமாக சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக, திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. இதனால் உரிய சுகாதார முறையை பின்பற்றுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.




இதேவேளை, நேற்றைய தினம் 24 மணித்தியாலத்திற்குள் கொரோனா நோயாளிகள் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள். இவர்களுக்கு மேலதிகமாக நேற்று முன்தினம் 43 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.