பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள கோரிக்கை!!

925


தொடரும் மழை..



நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழை தொடரும் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது. இந்தநிலையில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யலாம் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.



மின்னல் தாக்கங்களில் இருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு வானிலை மையம் கோரியுள்ளது.




இதற்கிடையில் தொடர் மழைக்காரணமாக கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆய்வு பணியகம் விடுத்துள்ளது.