யாழில் இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் பலி!!

1005

விபத்தில்..

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று ( 06.09) பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே உ யிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகாலிங்கம் வின்சன் கோமகன் உ யிரிழந்ததுடன், கச்சேரி – நல்லூர் வீதியைச் சேர்ந்த மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உடற்கூற்றுப் ப ரிசோ தனையின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.