வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்து : 10க்கு மேற்பட்டவர்கள் காயம்!!

2476

சொகுசு பேரூந்து விபத்து..

வவுனியாவிருந்து கொழும்பு நோக்கி நேற்று (06.09.2020) மதியம் பயணித்த சொகுசு பேரூந்து சாலியவெவ பகுதியில் விபத்துக்குள்ளானதில் 10க்கு மேற்பட்ட பயணிகள் சிறுகாயங்களுக்குள்ளாயியுள்ளனர்.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் சொகுசு பேரூந்து வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று (06.09) மதியம் பயணத்தினை ஆரம்பித்துள்ளது.

அனுராதபுரம் – புத்தளம் பாதையூடாக கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் நேற்று (06.09) மாலை 4.30 மணியளவில் சாலியவெவ பாடசாலைக்கு அருகே பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளனாது. அதன் பின்னர் பேரூந்து பயணித்த பயணிகள் அனைவரும் அவசர பாதையூடாக பேரூந்திலிருந்து வெளியேறினார்கள்.

இவ்விபத்தில் 10க்கு மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றமையுடன் மழை காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.