வவுனியாவில் பொது மக்களின் குடும்ப விபரங்களை திரட்டும் பிரதேச செயலகம்!!

1757

வவுனியா பிரதேச செயலக பிரிவினுள் குடும்பங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

புதிதாக நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிப்பயிலுனர்கள் மக்களின் வீடுகளுக்கு வருகை தரும் சமயத்தில் அவர்களது அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களினால் கேட்கப்படும் விபரங்களை பூரணமாக வழங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்துடன் குடும்ப விபர அட்டை அல்லது அதற்கு பதிலாக வழங்கப்பட்ட ஆவணம், 2019 வாக்களார் இடாப்பு சிட்டை, குடும்ப அங்கத்தவர்களின் விபரங்கள், பிறப்பு சான்றிதழ்கள்,

தேசிய அடையாள அட்டை, திருமணச் சான்றிதழ், தொலைபேசி இலக்கம், கொடுப்பனவு விபரம், காணி ஆவணங்கள் என்பவற்றை பொதுமக்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.