வவுனியாவில் மூன்று சக்கர வண்டியை மோதித்தள்ளிய பேருந்து : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய வயோதிபர்!!

1359

விபத்து..

வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மூன்று சக்கரவண்டியில் பயணித்த முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட வயோதிபர் வீதியைக் கடக்க முற்பட்டபோது தனியார் பேருந்து மோதியதில் காயமடைந்த வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 1 மணியளயவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா, ஈச்சங்குளம் கருவேப்பங்குளம் பகுதியை சேர்ந்த இராசையா செல்வராசா (வயது 68) இன்று காலை வைத்தியசாலைக்கு சென்று நாய் கடிக்கு ஊசி போட்டுவிட்டு,

இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள போன் திருத்தம் செய்யும் கடைக்கு கைத்தொலைபேசி திருத்தம் செய்வதற்காக கடைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பும் போது பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக பிரதான கண்டி வீதியைக் கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது திடீரென்று பயணித்த வவுனியா – முல்லைத்தீவு தனியார் பேருந்து மூன்று சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் மீது மோதியது.

இதன்போது பேருந்து கீழ் பகுதியில் சிக்கிக்கொண்ட நபர் கை, மற்றும் காலில் சிறுகாயமடைந்து அதிஷ்டவசமாக பொது மக்களினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அமைதிக்கப்பட்டார்.

குறித்த நபர் கடந்த இறுதி யு த்தத்தில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற எ றிக ணை வீச்சில் கா யடைந்து இடுப்புக்கு கீழ் செயற்பாடுகள் இன்றி மூன்று சக்கர நாற்காலியின் துணையுடன் தனது அன்றாட செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்.