பருத்தித்துறையில் உயிரிழந்த நபர் உயிர் பிழைத்தாரா?

881

பருத்தித்துறையில்..

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உ யிரிழந்த நபர் உ யிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டமையினால் கு ழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் உயிருடன் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்த போதும், வைத்தியசாலை நிர்வாகம் அதனை மறுத்துள்ளது.

நெல்லியடி – இராஜ கிராமத்தை சேர்ந்த ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் உ யிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத அறைக்கு அனுப்பபட்டுள்ளது. பி ரேத அ றைக்கு சென்ற உறவினர்கள் குறித்த நபர் உயிருடன் இருப்பதாக கூறியிருக்கின்றனர்.

இதனையடுத்து பிரேத அறையிலிருந்து உடலை வைத்தியசாலைக்குள் உறவினர்கள் கொண்டு சென்றிருக்கின்றனர். எனினும் அவர் இ றந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வைத்தியசாலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபர் 1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே உ யிரிழந்துள்ளார். எனினும் உறவினர்களால் வைத்தியசாலையில் கு ழப்ப நிலை ஏற்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.