வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உ யிரிழப்பு!!

2122


தனிமைப்படுத்தல்..



டுபாயிலிருந்து வருகை தந்த ஒருவர் நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் உ யிரிழந்துள்ளார். இதன்போது 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவரே நேற்று நுவரெலியா வைத்தியசாலையில் உ யிரிழந்துள்ளார்.



கடந்த 01.09.2020 அன்று டுபாயில் கடமையாற்றிய நிலையில் இவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வருகை தந்ததன் காரணமாக இவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி நுவரெலியாவில் அமைந்துள்ள விருந்தகமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.




இவர் டுபாய் நாட்டில் தனியார் நிறுவனத்தில் சேவையாற்றிய பொழுது இவர் ஒருவகை வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் நாடு திரும்பியுள்ளார்.


அதனை தொடர்ந்து நுவரெலியாவில் விருந்தகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவருக்கு சுகவீனம் ஏற்படவே கடந்த 02.09.2020 அன்று நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உ யிரிழந்துள்ளார்.

இவருக்கு கொரோனா தொற்று தொடர்பான எவ்விதமான அறிகுறியும் இல்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதுடன்,உடலில் ஏற்பட்ட வைரஸ் பரவல் மற்றும் நீரிழிவு நோயின் காரணமாகவே இவர் உ யிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


இவருடைய சொந்த இடம் கொழும்பு என்ற போதிலும் உ யிரிழந்தவர் நுவரெலியா மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.