வவுனியா பொது வைத்தியசாலையில் கவனக்குறைவால் 3 பிள்ளைகளின் தந்தை மரணம்!!

3408

3 பிள்ளைகளின் தந்தை..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களின் கவனக்குறைவினால் 3 பிள்ளைகளின் தந்தை உ யிரிழந்துள்ளதாக தெரிவித்து அவரின் உறவினர்கள் வைத்தியசாலையில் க த றி அ ழுததுடன் ச டலத்தினையும் ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இன்று (08.09.2020) மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் நாய் கடித்தமைக்கான தடுப்புசி ஏற்றுவதற்காக இன்று (08.09) காலை 3 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய சிவபாலன் என்பவர் சென்றுள்ளார். தடுப்புசியினை ஏற்றிய அவர் 10.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பிய அவர் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தினையும் உட்கொண்ட பின்னர் உறங்கிய அவருக்கு நெஞ்சு வருத்தம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து அவர் 11.15 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக 11.30 மணியளவில் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அவசர சிகிச்சை பிரிவின் வைத்தியர்கள் அவருக்கு 30 நிமிடங்களாக சிசிக்சையளித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வைத்தியர்களின் கவனக்குறைவினாலேயே அவர் உ யிரிழந்துள்ளதாகவும் அவருக்கு தடுப்பூசி ஏற்றும் சமயத்தில் சீரான முறையில் ப ரிசோ தனை மேற்கொள்ளவிள்ளை எனவும் தெரிவித்து அவரின் உறவினர்கள், பிள்ளைகள் வைத்தியசாலை முன்றலில் க தறி அழுததுடன் சடலத்தினையும் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் இ றந்தவருக்கு சிகிச்சை மேற்கொண்ட அவசர சிகிச்சை பிரிவின் வைத்தியரை தொடர்பு கொண்டு வினவிய சமயத்தில், அவரை எமது பிரிவுக்கு கொண்டு வந்த சமயத்தில் அவருக்கு இதயத்துடிப்பு காணப்படவில்லை.

மற்றும் தானாக சுவாசிக்கும் தன்மையும் இருக்கவில்லை. அதன் பின்னர் நாம் எம்மால் முடிந்தளவு சிகிச்சையளித்தோம் எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. ம ரண வி சாரணை முடிவுகளின் பின்னரே ம ரணத்திற்கான காரணத்தினை தெரிவிக்க முடியுமென தெரிவித்தார்.

எனினும் உறவினர்கள் சடலத்தினை ஏற்க மறுப்பு தெரிவித்து அவசர சிகிச்சை பிரிவு முன்பாக கூடியுள்ளமையினால் வைத்தியசாலையில் ப தற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.