வவுனியா செட்டிகுளம் பகுதியில் குளக்கட்டில் நடந்த கைகலப்பு : பெண் உட்பட ஐவர் வைத்தியசாலையில்!!

1392


செட்டிகுளம் பகுதியில் ..



வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னதம்பனைக்குளம் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோ த லி ல் பெண் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



சின்னத்தம்பனைக்குளம் குளப்பகுதிக்கு அண்மையில் குறித்த சம்பவம் நேற்று (07.09.2020) இரவு இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் இரு பிரிவினருக்கு சின்னத்தம்பனை குளத்தில் மீன் பிடிப்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோ த லா க மா றியதுடன் வா ள்வெ ட்டு ச ம்பவமும் இ டம்பெற் றுள்ளது.




குறித்த சம்பவம் காரணமாக பெண் உட்பட ஐவர் ப டுகா யமடைந்த நிலையில் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.


இதன் போது 21,32,40,40,43 வயதுடைய ஐவரே இவ்வாறு ப டுகாயம டைந்தவர்களாவார்கள். சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.