கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது!!

709


வெள்ளத்தில் மூழ்கிய..



நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பில் பலத்த மழை பெய்கின்றது. இந்நிலையில் கொழும்பின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



நள்ளிரவு 12.30 மணி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், கடும் காற்றும் வீசுவதாகவும், இதனால் வீதியோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அத்துடன், வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதனிடையே கொழும்பு – நவகம்புர பகுதியில் குடியிருப்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள. இதேவேளை, சீரற்ற காலநிலை தொடர்பில் கொழும்பு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.