காசல்ரீ நீர் தேக்க வான் கதவுகள் திறப்பு..!

741

காசல்ரீ நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்து நிலையம் அறிவித்துள்ளது.

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்ற மட்டத்தை அடைந்துள்ளது.

காசல்ரீ நீர் தேக்கத்தின் அணைக்கட்டின் அடிப்பகுதியில் உள்ள நீரை வெளியேற்றும் அவசர கதவுகள் திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (23) காலை முதல் அணைக்கட்டின் 12 வான் கதவுகளையும் மேவி நீர் வழிந்தோட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான ஒரு நிகழ்வு சுமார் 43 வருடங்களுக்கு முதல் இடம்பெற்றதாக இதற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் களனி ஆற்றை அண்டிய பிரதேசங்களில் வசிப்பவர்களை அவதானமாக செயற்படுமாறு இடர் முகாமைத்து நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

fall