ஐரோப்பிய நாடொன்றில் முகக் கவசம் அணியாத இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்!!

706

முகக் கவசம்..

இத்தாலியில் இலங்கையர்கள் இருவருக்கு தலா 377 யூரோ என்ற கணக்கில் 754 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெறுமதியில் அது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை விடவும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.

இத்தாலி, பிரேஷியா நகரத்தில் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காலும் இருந்த இரண்டு இலங்கையர்களுக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இலங்கையர்கள் இருவரும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதி பரிசோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளினால் வாகனம் நிறுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது.

அதில் ஒருவர் முகக் கவசம் வைத்திருந்த போதிலும் அதனை உரிய முறையில் அணியாமல் இருந்ததுடன் மற்றைய நபரிடம் முகக் கவசம் இல்லாதமையினாலும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.