வவுனியாவில் காருடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

2646

விபத்து..

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தோட்டம் பகுதியில் காருடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் சாம்பல் தோட்டம் பகுதியில் இன்று (09.09.2020) இரவு 8.40 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் நெளுக்குளம் பகுதியிலிருந்து பூவரசங்குளம் பகுதியில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் கற்பகபுரம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காருடன் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காரின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த செக்கட்டிப்புலவு பகுதியினை சேர்ந்த 26,28,30 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்களே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.