வீதி ஒழுங்கை முறை..
பேருந்துக்களுக்கான முன்னுரிமை வீதி ஒழுங்கை முறை மீண்டும் அமுல் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இந்த முறை மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பிலும் புறநகர்களிலும் வாகன நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இந்த முறை கைக்கொள்ளப்படவுள்ளது.
ஏற்கனவே இந்த முறை மேல்மாகாணத்தில் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.