கட்டுநாயக்க நோக்கி வந்த விமானத்தில் ஏற்பட்ட கு ழப்பம் : அவசரமாக வெளியேற்றப்பட்ட பயணி!!

1249

விமானத்தில்..

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி செல்ல தயாராக இருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கை பயணி ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தவறான ஆசனத்தில் பயணி ஒருவர் அமர்ந்தமையினால் ஏற்பட்ட கு ழப்பநிலையை அடுத்து, குறித்த பயணியை விமானத்தில் இருந்து இறக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விமான பயணி தனக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்துக் கொள்ளாமையினால் விமான ஊழியர்களுடன் தொடர்ந்து வாய்த்த கராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை தீவிரமடையும் போது இன்னும் ஒரு பயணி தனது கையக்க தொலைபேசியில் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 6 நோயாளிகளை அழைத்து செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசன பகுதியில் இந்த நபர் அமர்ந்துள்ளார்.

அவருக்கான ஆசனத்தில் அவரை அமருமாறு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அவர் அந்த கோரிக்கையை நிராகரித்ததாக ஸ்ரீலங்கன் விமான சேவை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நபர் ம ன நோ யினால் பா திக்கப்பட்ட ஒருவர் என பின்னர் அடையாளம் காணபட்ட நிலையில் அவர் வைத்திய சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு இலங்கை தூதரக அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.