சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகத்தில் புதிய நடைமுறை!!

1033

சாரதி அனுமதிப் பத்திரம்…

ல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கம் பொது எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரதான கண் பரிசோதனையே மேற்கொள்ளப்படும். சகலருக்கும் எக்ஸ்-ரே கதிர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு செலவிடும் பணத்தை சேமிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் சீனி மற்றும் குருதி அழுத்தங்கள் தொடர்பான சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இது நபரொருவர் சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதில் எந்த தாக்கமும் செலுத்தாது.

விண்ணப்பதாரிகளுக்கு அறியப்படுத்துவதற்காக மாத்திரமே இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.