அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூ ழ்கி உ யிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்!!

778

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி 21 வயதான இளைஞனே உ யிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் குறித்த ஆற்றுக்குச் சென்ற இளைஞன் நீச்சலில் ஈடுபட்டபோது கா ணாமல்போ னதாக அறிவிக்கப்பட்டது.

இவரைத் தே டும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் குறித்த இளைஞரின் ச டலம் ஆற்றிலிருந்து மீ ட்கப்ப ட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த 21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு ம ரணமடைந்துள்ளார். தொழில் நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.