இலங்கையில் கொரோனாவால் 13ஆவது நபர் ம ரணம்!!

880

கொரோனா..

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 13ஆவது நபர் உ யிரிழந்துள்ளார். பஹ்ரைனில் இருந்து கடந்த 02 ஆம் திகதி வந்த குறித்த நபர் சிலாபம், அம்பகஹவில தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நபர் செப்டம்பர் 9 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உ யிரிழந்து ள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.