பஸ்ஸில் மோதுண்ட இளைஞர் படுகாயம்!!

655

விபத்தில்..

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் கொண்டிருக்கையில் தேற்றாத்தீவு பிரதான வீதியில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்துக்கு பின்னால் வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் மீட்டெடுத்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மோட்டார் சைக்கிள், பயணிகள் பஸ் சேதமடைந்துள்ளது. இவ்விபத்து சம்பந்தமாக களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.