திருமணத்துக்கு மறுத்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டிலிருந்து வெளியேறிய இளம்பெண் : தற்போது செய்துள்ள வியக்க வைக்கும் செயல்!!

10960

இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தார் வ ற்புறுத்தியதால் 7 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய பெண் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று வியக்க வைத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் மீருட்டை சேர்ந்தவர் சஞ்சு ராணி வெர்மா (35). சஞ்சு முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தபோது இவரின் தாய் உ யிரிழந்தார். இதன்பின்னர் குடும்பத்தார் சஞ்சுவின் படிப்பை நிறுத்திவிடுமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தினர்.

ஆனால் படிப்பின் மீது அதிக ஈடுபாடு கொண்ட சஞ்சு வீட்டை விட்டு வெளியேறி பின்னர் தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் தனது கடுமையான உழைப்பால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சஞ்சு வணிகவரி அதிகாரியாக ஆகியுள்ளார்.

மேலும் தனது குடும்பத்தாரிடம் திரும்பியுள்ள சஞ்சு அவர்களுக்கு நிதி ரீதியாக உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அவரை படிக்க விடாமல் தடுத்து வீட்டிலிருந்து வெளியேற தூண்டியவர்களுக்கு சஞ்சு ஆதரவு தருவதை பலரும் பாரட்டியுள்ளனர்.