ம து போ தையில் முச்சக்கர வண்டியில் சென்றவர்கள் ஏற்படுத்திய விபத்தினால் ப தற்றம்!!

480

விபத்தில்..

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பார் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் கா யமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியில் வந்தவர் ம து போ தையில் காணப்பட்டதனால் அங்கு ப தற்ற நி லைமையேற்பட்டது.

பார் வீதியில் உள்ள சின்ன லூர்து அன்னை ஆலயத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் ம து போ தையுடன் காணப்பட்டதனால் இந்த விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது அங்கு இளைஞர்கள் ஒன்றுகூடியதனால் அங்கு ப தற்ற நிலைமை ஏற்பட்டதுடன் அங்குவந்த மட்டக்களப்பு தலைமைக போக்குவரத்து பொலிஸார் நிலைமையினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் விபத்து இடம்பெற்ற பின்னரும் கைகளில் ம து போ த்தலுடன் காணப்பட்டதனால் அப்பகுதியில் மக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த நபர்களை போக்குவரத்து பொலிஸார் அழைத்துச்சென்றதை தொடர்ந்து அங்கு ப தற்ற நிலைமை முடிவுக்கு வந்தது.